புதுடெல்லி,
ஒகி புயலால் பாதிப்படைந்த தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு நிவாரண நிதியாக ரூ.325 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லட்சதீவு, தமிழகத்தில் கன்னியாகுமரி, மற்றும் கேரளாவிற்கு சென்று ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி டெல்லி திரும்பிய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், புயலால் முழுமையாக பாதிப்படைந்த 1400 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும் எனவும் புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.