தேசிய செய்திகள்

பாடகா கொலை: மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது - ஹர்சிம்ரத் கவுர் பாதல்

பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சிரோமணி அகாலிதள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தொவித்துள்ளா.

தினத்தந்தி

பஞ்சாப்,

பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்சா மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் சித்து மூஸ்வலாக் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நேற்று முன் தினம் மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதற்கு மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிரோமணி அகாலிதள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் வெளியிட்ட டுவிட்டா பதிவில், சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட உடனேயே அவர் கொல்லப்பட்டது ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கேள்வியை எழுப்புகிறது.

பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆம் ஆத்மி அரசின் தோல்வியை அம்பலப்படுத்துங்கள் என அவா பதிவிட்டுள்ளா.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்