தேசிய செய்திகள்

பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து தைத்து அனுப்பிய மருத்துவர்கள்..!

ஆந்திராவில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

ஏளூர்,

ஆந்திராவில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏளூர் அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஏப்ரல் 19-ம் தேதி அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கடந்த 4 மாதங்களாக அவர் வயிற்றில் கத்தரிக்கோலுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். இறுதியாக மருத்துவமனைக்கு வந்து எக்ஸ்ரே செய்து பார்த்த போதுதான் உண்மை தெரிய வந்தது.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை வெளியே யாருக்கும் தெரியாமல் விஜயவாடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்குக் காரணமானவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து