தேசிய செய்திகள்

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

உடுப்பியில் விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.

தினத்தந்தி

உடுப்பி :-

உடுப்பி மாவட்டம் மல்பே பகுதியில் வசித்து வருபவர் கோபாலா ஷானிநார்(வயது 35). மீனவரான இவர் கடந்த 11-ந் தேதி மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனது சக மீனவர்களுடன் ஒரு விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றார்.

கடந்த 13-ந் தேதி அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கோபாலா கால் தவறி படகில் இருந்து கடலில் விழுந்தார். அதைப்பார்த்த அவரது சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கோபாலாவை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கரை திரும்பிய மற்ற மீனவர்கள் இதுபற்றி மல்பே போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை