தேசிய செய்திகள்

புதிய வருமானவரி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்; ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது

இச்சட்டத்தில் புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தினத்தந்தி

புதுடெல்லி,

1961-ம் ஆண்டின் வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமானவரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த 12-ந் தேதி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, சட்டவடிவம் பெற்றுள்ள புதிய வருமானவரி சட்டம்-2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.

இச்சட்டத்தில் புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிக்கலான வரிசட்டங்களை எளிதாக புரியும்வகையில் எளிதான வார்த்தைகளுடன், அத்தியாயங்கள், உட்பிரிவுகள் ஆகியவற்றை குறைத்து இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்