தேசிய செய்திகள்

ஓட்டல் அறையில் ரகசிய கேமரா தம்பதி புகாரில் உரிமையாளர் கைது

அறையில் ரகசிய கேமரா இருந்ததாக தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சுற்றுலா வந்த தம்பதியினர் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கள் அறையில் இருந்த மின் விசிறியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றி விசாரிக்க வரவேற்பாளரை தொடர்புகொண்டபோது யாரும் பதில் சொல்லவில்லை.

இதுகுறித்து அந்த தம்பதியினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஓட்டல் உரிமையாளரை கைது செய்து மின் விசிறி, கேமரா, உரிமையாளரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.