தேசிய செய்திகள்

உலகிலேயே உயரமான படேல் சிலையை பார்வையிட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது

குஜராத்தின் கெவாடியா மாவட்டத்தில் நர்மதையாற்றில் உள்ள சர்தார் சரோவர் அணை அருகே 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை கடந்த 2018-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி இந்த சிலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் இந்த பிரமாண்ட சிலையை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கண்டு பிரமித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர் வருகை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சிலையை இதுவரை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளதாக மாநில துணை தலைமைச்செயலாளர் ராஜீவ் குப்தா தெரிவித்துள்ளார்.

படேல் சிலையை பார்வையிடுவதற்காக சிறப்பு ரெயில் மற்றும் சிறப்பு விமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு