தேசிய செய்திகள்

சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு போயுள்ளது.

பெங்களூரு: கதக் (மாவட்டம்)டவுன் சித்தலிங்கபுரா பகுதியில் வசித்து வருபவர் பசவராஜ். இவர் வியாபாரி ஆவார். இந்த நிலையில் நேற்று சித்தலிங்கபுரா பகுதியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் பசவராஜும், அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் பசவராஜுன் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த 250 கிராம் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கத்தை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்த புகாரின்பேரில் கதக் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்