தேசிய செய்திகள்

போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது- மத்திய உணவுத்துறை

போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது. தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என மத்திய உணவுத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மராட்டியம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இங்கு வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் என அனைத்து மாநிலங்களிலும் விலை அதிகரித்து உள்ளன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வெங்காய விலை உயர்வுக்கு கனமழையே காரணம் என்று சொல்லப்பட்டாலும், பதுக்கலும், வர்த்தக சூதாட்டமும்தான் காரணம் என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது. தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திரிபுரா, ஹரியானா, ஆந்திர மாநிலங்கள் கோரிய அளவு ஏற்கனவே வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு கிலோ ரூ. 15.59-க்கு வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்