தேசிய செய்திகள்

ராமஜென்ம பூமி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் கைது

அயோத்தியில் ராமஜென்ம பூமி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி வளாகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கம்லேஷ் திவாரி உள்ளிட்ட சிலர் நேற்று பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி, அந்த வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கைதானவர்கள் பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக பைசாபாத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில் சிசோடியா தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்