தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

உத்தபிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் லலித்பூர் மாவட்டம் பண்டல்கண்ட் பகுதியில் இன்று மாலை சிலர் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. மேலும், திடீரென மின்னல் தாக்கியது. இதில் ஜஷோத், ராஜ்குமாரி, ராஜேஷ் ஆகிய 3 பேர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சீமா என்பவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்