தேசிய செய்திகள்

திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபி தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் - கொடி, சுவரொட்டிகள் அழிப்பு

திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபியின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் கொடி, சுவரொட்டிகள் போன்றவை அழிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நடிகர் சுரேஷ்கோபி போட்டியிடுகிறார். இவரது தேர்தல் அலுவலகம் முக்காட்டுகர என்ற இடத்தில் உள்ளது. திங்கட்கிழமை அதிகாலை யாரோ சிலர் அந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த கொடிகள், சுவரொட்டிகள் போன்ற தேர்தல் பிரசார பொருட்களையும் அழித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த அலுவலகம் அருகில் சிலர் கும்பலாக செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மண்ணுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுபற்றி மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகேஷ் கூறும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தோல்வி பயம் காரணமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். எனவே கூடுதல் மத்திய படைகளை அனுப்பி தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு