தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு 11 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். #UPthunderstorm

தினத்தந்தி

மொரதாபாத்,

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த பலத்த மழையின் போது ஏற்பட்ட பேரிடியில் சிக்கி இரு மாநிலங்களிலும் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அதே போல் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் இடி தாக்கி 2 பேரும், உத்தரகாண்ட் மாநிலம் மண்டல் பகுதியில் பலத்த மழைக்கு 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சில இடங்களில் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் என அறிவித்திருந்த நிலையில், அடுத்த 2 தினங்களுக்கு உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு