தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31ந்தேதி நடை மூடப்படும்; தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31ந்தேதி நடை மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. #Tirupati

தினத்தந்தி

திருப்பதி,

சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்பொழுது கிரகணம் ஏற்படுகிறது. இதில் பூமிக்கு பின்னால் சந்திரன் வரும்பொழுது சூரியனின் ஒளி நிலவின் மீது விழாது. இது சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 31ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்று நடை மூடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடை மூடப்படும் நிலையில், திவ்ய தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

காத்திருக்கும் அறையிலும் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை. அதற்கேற்ப பக்தர்கள் தங்களது தரிசன திட்டத்தினை அமைத்து கொள்ள வேண்டும். தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் இலவச உணவு அன்று ரத்து செய்யப்படுகிறது என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

#Tirupati #devasthanam #lunareclipse

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு