தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் நோவாபாரா சட்டமன்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி

மேற்கு வங்காளத்தில் நோவாபாரா சட்டமன்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. #TMC

நோவாபாரா,

மேற்கு வங்காளத்தில் நோவாபாரா சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சுனில் சிங் 63 ஆயிரத்து 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1 லட்சத்து ஆயிரத்து 729 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி 38,711 வாக்குகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது. சி.பி.ஐ. (எம்) 35,497 வாக்குகளுடனும் மற்றும் காங்கிரஸ் 10,527 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

இதேபோன்று உலுபேரியா மக்களவை தொகுதிக்கான தேர்தலில் அக்கட்சி 68,503 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகின்றது. அதற்கு அடுத்த இடத்தில், பாரதீய ஜனதா மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிகள் உள்ளன.

#TMC #bypoll #election #bjp #Westbengal

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு