புதுடெல்லி,
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் நேற்றில் இருந்து முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்றைய முதல் நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான மையங்களில் 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 553 மையங்களில் 17072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ஒட்டுமொத்தமாக 2,24,301 பேருக்கு இரண்டு நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டது. மூன்று பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டது. முதல் நாளில் 2 லட்சத்து 07 ஆயிரத்து 229-பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது அமெரிக்கா, இங்கிலாந்தில் போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.