தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி.க்கு எதிராக ராஜஸ்தானிலும் வணிகர்கள் போராட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வணிகர்கள் ஜி.எஸ்.டி.க்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

ஜெய்பூர்,

ஜி.எஸ்.டி.க்கு எதிராக ராஜஸ்தானை சேர்ந்த பல வணிக அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.பல வணிகர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கு பெற்றனர்.

வணிக சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அருண் அகர்வால் பேசுகையில் ஜி.எஸ்.டி.யில் உள்ள சிக்கலான செயல்முறைகளையும், அதிக வரி விதிப்பையும் எதிர்த்து இந்த போராட்டம் நடத்தபடுவதாக கூறினார்.

போராட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் ஜெய்பூர், உதய்பூர், ஆழ்வார், சிகார், ஜோத்பூர், கோட்டா மற்றும் சில மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்