தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம் மருத்துவமனையில் தீவிபத்து 2 பேர் பலி

உத்தரப்பிரதேசம் பரேலி நகரில் உள்ள மருத்துவமனையில் ஐ.சி.யு.வில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள்.#UttarPradesh #Tamilnews

லக்னோ

உத்தரப்பிரதேசத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள பரேலி நகரில் அமைந்துள்ள சாய் மருத்துவமனையில் (ICU ) ஐ.சி.யு.வில் தீ விபத்து ஏற்பட்டது.

இன்று காலை சுமார் 11 மணியளவில் இந்த கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். ஒரு வர் படுகாயம் அடைந்தார். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.