தேசிய செய்திகள்

மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் பலி

வெடி விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்

தினத்தந்தி

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் சேஹா பகுதியில் மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள பாயிலர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் , போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வெடி விபத்தால் ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து