அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29ந்தேதி ஜாவித்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடுத்த நாள் கொண்டு செல்லப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் பெருமளவிலான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்டு ஜாவித் அங்கிருந்து தப்பியோடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.