தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. . இந்நிலையில், நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.