புதுடெல்லி,
இந்தியா முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. . இந்நிலையில், நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.