புதுடெல்லி,
டெல்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கூடுதல் வரிகளை விதித்து வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அப்போது, இருதரப்பு உறுவுகளை பற்றி இருவரும் உரையாடினர். இந்த சந்திப்பை, நம்முடைய இரு நாடுகளின் நட்புறவு தொடர்பான பல்வேறு பரிணாமங்கள் தொடர்பாக இந்த உரையாடல் அமைந்திருந்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக கோர் கூறும்போது, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய தாதுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம் என குறிப்பிட்டார்.