தேசிய செய்திகள்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

கோர் கூறும்போது, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய தாதுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம் என குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கூடுதல் வரிகளை விதித்து வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அப்போது, இருதரப்பு உறுவுகளை பற்றி இருவரும் உரையாடினர். இந்த சந்திப்பை, நம்முடைய இரு நாடுகளின் நட்புறவு தொடர்பான பல்வேறு பரிணாமங்கள் தொடர்பாக இந்த உரையாடல் அமைந்திருந்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக கோர் கூறும்போது, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய தாதுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம் என குறிப்பிட்டார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு