தேசிய செய்திகள்

சைப்ரஸ், ஆஸ்திரிய நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் நாளை பயணம்

சைப்ரஸ் குடியரசு மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

மத்திய வெளிவிவகார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சைப்ரஸ் குடியரசு மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு நாளை (29-ந்தேதி) முதல் வருகிற ஜனவரி 3-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதன்படி, சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நாளை முதலில் பயணம் மேற்கொள்ளும் மந்திரி ஜெய்சங்கர் வருகிற 31-ந்தேதி வரை அந்நாட்டில் இருக்கிறார். இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு குறிக்கிறது.

இந்த பயணத்தில், சைப்ரஸ் வெளியுறவு மந்திரி அயோன்னிஸ் கசவுலைட்சை சந்தித்து பேசுகிறார். அந்நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு சமூகத்தினர் முன் உரையாற்றும் அவர், இந்திய வம்சாவளியினருடனும் உரையாடுகிறார்.

இதன்பின்பு, ஆஸ்திரியாவில் அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகார மத்திய மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்து பேசுகிறார் என்று அறிக்கை தெரிவிக்கின்றது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை