தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்

மராட்டிய மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே பால்கர் மாவட்டம் விக்ரம்காட் பகுதியில் பழங்குடியின மக்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றா. இது குறித்து அவர் பேசியதாவது:-

அடுத்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது சாதி விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அப்போது தான் மொத்த தொகையில் எவ்வளவு இருக்கிறாம் என்பது மக்களுக்கு தெரியவரும். சாதிய பாகுபாடை அதிகரிப்பது இதன் நோக்கம் கிடையாது.

மற்ற சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மராத்தாக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க இந்த நடவடிக்கை உதவும். எந்தவித வருவாயும் இல்லாதவர்களுக்கு அரசு 5 ஏக்கர் நிலம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில, மாவட்ட தலைமையகங்களில் இந்திய குடியரசு கட்சி வரும் 25-ந் தேதி போராட்டத்தில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்