தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை கொன்ற கொடூர தந்தை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை தந்தை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

பதேபூர்,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஹுசைங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிசாபூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் சந்திரகிஷோர் லோதி. இவரது 3 வயது மகன் ராஜ். இந்த நிலையில் புதன்கிழமை இரவு, குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்த சந்திரகிஷோர், ஆத்திரத்தில் தனது மகனை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்து, உடலை விவசாய வயலில் புதைத்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், சந்திரகிஷோரை கைது செய்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?