தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் மகளை ஈவ் டீசிங் செய்தவர்களை தடுத்த 65 வயது தந்தை சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் மகளை ஈவ் டீசிங் செய்தவர்களை தடுத்த 65 வயது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தில் முசாபர்நகரில் ராம்புரி பகுதியில் வசித்து வந்த 65 வயது தந்தை தனது மகளுடன் வெளியே சென்றுள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணபால் மற்றும் விஷால் ஆகிய 2 பேர் முதியவரின் மகளிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை கண்ட அந்த தந்தை 2 இளைஞர்களையும் தடுத்துள்ளார். ஆனால் அவர்கள் தங்களிடம் வைத்திருந்த துப்பாக்கியால் முதியவரை சுட்டுள்ளனர். பின் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த தாக்குதலில் முதியவர் குண்டு காயங்களுக்கு பலியாகி விட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்