தேசிய செய்திகள்

தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற போலி கொரோனா சான்றிதழ் கொடுத்த பள்ளி ஆசிரியை

தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி, மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பித்தார்.

தினத்தந்தி

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் பிலிப்பிட் மாவட்டம் புரான்பூர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ரித்து தோமர். இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில், அவருக்கு வாக்குச்சாவடி அதிகாரி பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதில் இருந்து விலக்கு பெற விரும்பிய ரித்து தோமர், அதற்காக ஒரு மனுவை அளித்தார். அத்துடன், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி, மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பித்தார்.

ஆனால், அந்த சான்றிதழை அதிகாரிகள் பரிசோதித்தபோது, வேறு ஒருவரின் சான்றிதழை திருத்தி, ரித்து தோமர் தாக்கல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, ரித்து தோமர் மீது போலீசில் புகார் அளிக்குமாறு அடிப்படை கல்வி அதிகாரிக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து