தேசிய செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் 2023-ல் நிறைவடையும் என தகவல்

தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் 2023 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என இந்திய விமான நிலையங்களின் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தும் பணிகளை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (AAI) மேற்கொண்டு வருகிறது. இதில் ஏ-321 வகை விமானங்களை இயக்குவதற்கான ஓடுபாதை நீட்டிப்பு, புதிய முனையத்தின் கட்டுமானம், புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட கட்டுமானங்கள் ரூ.381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என இந்திய விமான நிலையங்களின் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு 13,500 சதுர அடியில் புதிதாக அமைய உள்ள முனையம், ஒரே நேரத்தில் 600 பயணிகளை கையாளும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்