கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் 3-ஆம் கட்ட தேர்தல் 60 சதவீதம்: பஞ்சாபில் சட்டசபை தேர்தல் 68 சதவீத வாக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் 3-ஆம் கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகளும், பஞ்சாபில் சட்டசபை தேர்தலில் 68 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. ஹத்ராஸ், பிரோசாபாத், இடா, காஸ்கஞ்ச், மெயின்புரி உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. விறு விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில், 60.4 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, ஆம் ஆத்மி முதல்-மந்திரி வேட்பாளர் பகவந்த் மன், முன்னாள் முதல்-மந்திரிகளான அமரீந்தர் சிங், பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர். மாநிலம் முழுவதும் விறு விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் பஞ்சாபில் ஒரேகட்டமாக நடந்த சட்டசபை தேர்தலில், 68.30 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து