தேசிய செய்திகள்

உத்தரபிரதேம்: 14 கொலைகள் செய்த நபர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 கொலைகள் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மணிப்பூரி,

உத்தரபிரதேச மாநிலம் கோத்வாலி பகுதியில் அடுத்தடுத்து 14 கொலைகள் செய்த கவுரவ் சவுகானை உள்ளூர் போலீசார் இன்று கைது செய்தனர். அவன் இந்த கொலைகளுக்கு பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில் கோத்வாலி பகுதியில் தொடர்ந்து 14 கொலை செய்து தலைமறைவாக இருந்து போலீசாருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த கவுரவ் சவுகான் இன்று கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவன் மேலும் 4 கொலைகளை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது என்றார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு