தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் போலீஸ் ஜீப் பசுவை பாதுகாக்க முயற்சித்த போது பெண் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் போலீஸ் ஜீப் பசுவை பாதுகாக்க முயற்சித்த போது பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தினத்தந்தி

லக்னோ,

பாஸ்தி மாவட்டம் ஹராய்யாவில் சாலையில் உஷா தேவி என்பவர் தன்னுடைய பேத்திகளுடன் நடந்து சென்று உள்ளார். அப்போது அவ்வழியாக வந்த போலீஸ் ஜீப் அவர் மீது மோதியது. அதில் உஷா தேவி உயிரிழந்தார். அவருடைய பேத்திகள் உள்பட 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாலையில் சென்ற பசுவை பாதுகாக்க போலீஸ் ஜீப்பை ஓட்டிய கான்ஸ்டபிள் முயற்சி செய்து உள்ளார். அப்போது ஜீப் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றவர்கள் மீது மோதிவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு