தேசிய செய்திகள்

ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு 6 நாள் ஆயுர்வேத பயிற்சி - உத்தரகாண்ட் அரசு

உத்தரகாண்டில் ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு 6 நாட்கள் ஆயுர்வேத பயிற்சி அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

இதுதொடர்பாக அந்த மாநில தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சாந்து நேற்று கூறுகையில், 'ஆயுஷ் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி, ஆயுர்வேத உண்மைகள், ஆவணங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

ஆயுர்வேத சிகிச்சை குறித்து ஆங்கில மருத்துவ டாக்டர்கள் மத்தியில் நிலவும் தவறான கருத்துகளை களையவும், அதன் பலன் குறித்த சந்தேகங்களை போக்கவும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுர்வேதம் வெறும் மருத்துவமுறை அல்ல, நோயற்ற வாழ்க்கையை வாழும் வழி ஆகும்' என்றார்.

ஆனால் ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு எப்போது ஆயுர்வேத பயிற்சி அளிக்கப்படும் என்ற விவரத்தை உத்தரகாண்ட் அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்