தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் சட்டசபை 26-ம் தேதி கூடுகிறது

வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்ட் சட்டமன்றத்தின் 2024-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வருகிற 26-ந்தேதி கூடுகிறது. இது தொடர்பாக விதான் சபா செயலாளர் ஹேம் சந்திர பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2024-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர், பிப்ரவரி 26-ந்தேதி காலை 11 மணிக்கு டேராடூனில் உள்ள விதான் சபா பவனில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறப்பு 4 நாட்கள் கூட்டத்தொடர் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு 7-ந்தேதி நடைபெற்ற சிறப்பு அமர்வின்போது, உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு