Image Courtesy : ANI 
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்: கேதர்நாத் கோவில் அருகே பனிச்சரிவு

கேதர்நாத் கோவில் அருகே இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கோவில் அருகே உள்ள மலையில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கேதர்நாத் கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காந்தி சரோவர் பகுதியில் இன்று காலை 5 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பனிச்சரிவு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு