தேசிய செய்திகள்

கனமழையால் உத்தரகாண்டில் கடும் பாதிப்பு: உள்துறை அமைச்சருடன் முதல்வர் திரிவேந்திர சிங் சந்திப்பு

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மாநிலத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து பேசினார்.

தினத்தந்தி

டெல்லி,

உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக பெய்த தொடர் கனமழையால் டன்ஸ் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. உத்தர்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் சமீப நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் உத்தரகாசி நகரில் மோரி பகுதியில் உள்ள அரகோட் என்ற இடத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.அது மட்டுமின்றி பெருமளவில் அரசு சொத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அரசுக்கு பெரும் இழப்பீடு ஏற்பபட்டுள்ளதாகவும் கூறினார்

இந்நிலையில் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மாநிலத்தில் பெய்த மழையால் உயிர் மற்றும் சொத்து இழப்பு குறித்து விளக்கமளித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை