தேசிய செய்திகள்

மும்பையில் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது - மாநகராட்சி அறிவிப்பு

மும்பையில் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் பொது மக்கள் ஆர்வமாக கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். நேற்று மட்டும் நகரில் 45 ஆயிரத்து 171 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை நகரில் 46 லட்சத்து 81 ஆயிரத்து 780 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 12 லட்சத்து 47 ஆயிரத்து 410 பேர் 2 டோஸ் போட்டு உள்ளனர். மொத்தம் 59 லட்சத்து 29 ஆயிரத்து 190 பேர் தடுப்பூசி போட்டு இருப்பதாக மாநகராட்சி கூறியுள்ளது.

இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை அரசு, மாநகராட்சி தடுப்பூசி மையங்கள் செயல்படாது என மாநகராட்சி அறிவித்து உள்ளது. இடையூறுக்கு வருந்துவதாகவும் மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்