தேசிய செய்திகள்

உ.பி. தேர்தல்; வாக்கு எந்திரத்தில் குளறுபடி என சமாஜ்வாதியினர் போராட்டம் - போலீஸ் குவிப்பு!

வாரணாசி மாவட்ட ஆட்சியர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

தினத்தந்தி

வாரணாசி,

உத்தரப்பிரதேசம் வாரணாசியின் பஹாரியா மண்டி பகுதியில் வாக்கு எண்ணும் மையம் முன்பு சமாஜ்வாதி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்கு எந்திரத்தில் குளறுபடி செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், வாக்கு எண்ணும் மையம் முன்பு சமாஜ்வாதி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில வாரணாசி மாவட்ட ஆட்சியர் கவுசால் ராஜ் சர்மா அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்