தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் கண்ணீர் விட்டு அழுத வெங்கையா நாயுடு

இன்று காலை மாநிலங்களவையில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்தபோது அவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காலை மாநிலங்களவை கூடியதும் ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசித்த வெங்கையா நாயுடு, அப்போது ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஜெய்பால் ரெட்டிக்கும், தனக்கும் இருந்த நட்பு குறித்து நினைவு கூர்ந்தார்.

ஜெய்பால் ரெட்டி உடனான தனது 40 ஆண்டுகால நட்பு மற்றும் அரசியல் பழக்கம் குறித்து பேசிய அவர், 1980 களின் ஆரம்பத்தில் ஆந்திர மாநில சட்டசபையில் தாங்கள் இணைந்து பணியாற்றியது குறித்தும் பேசினார். ஜெய்பால் ரெட்டியின் மறைவு தன்னை பெரிதும் பாதித்துள்ளதாக கூறிய அவர், அவையிலே கண்கலங்கி அழுதார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்