தேசிய செய்திகள்

பீகாரில் 2 இளைஞர்களை அடித்துக்கொன்ற கிராம மக்கள்

பீகாரில் 2 இளைஞர்களை கிராம மக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினத்தந்தி

பக்சார்,

மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன் வைத்து வட மாநிலங்களில் கும்பல் கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் பீகாரில் நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்களை கிராம மக்கள் அடித்து கொன்றனர்.

பீகாரின் பக்சார் மாவட்டத்துக்கு உட்பட்ட குர்தியா கிராமத்தை சேர்ந்த பிரதீப் ஷா (வயது 35), பர்குவா கிராமத்தை சேர்ந்த யோகேந்திர பாண்டே (25) ஆகிய 2 இளைஞர்கள் குர்தியா கிராமத்தில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்களே அவர்களை இரும்பு கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து