கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மோதலில் 3 பேர் காயம் - பாதுகாப்புப் படையினர் குவிப்பு

பெல்யாங் கிராமத்தில் நேற்று இந்த இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது.

தினத்தந்தி

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் 3-ந் தேதி கலவரம் வெடித்தது. 11 மாதங்களை கடந்த பிறகும் இந்த கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் டெங்நவுபால் மாவட்டத்தில் உள்ள பெல்யாங் கிராமத்தில் நேற்று இந்த இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் மெய்தி இனத்தை சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து மெய்தி இன பெண்கள் அங்கு பேரணி நடத்தினர். இதனால் அப்பகுதியில் கூடுதல் படைகள் குவித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஹெய்ரோக் மற்றும் டெங்நவுபால் ஆகிய மாவட்டங்களில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று மாலையில் இருந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்