தேசிய செய்திகள்

"காலை வணக்கம் கர்நாடகா... உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்.." - நடிகர் பிரகாஷ் ராஜ் டுவீட்!

40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்..உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்தநிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டர் பதிவில்,

காலை வணக்கம் கர்நாடகா...நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக...40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்..உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்