தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரி பதவி தலித்துக்கு வழங்கப்பட்டதா? பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கேள்வி

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. நேற்று சித்ரதுர்காவுக்கு வந்தார். அப்போது, தைரியம் இருந்தால் தலித் சமூகத்தை சேர்ந்தவரை பா.ஜனதா முதல்-மந்திரி ஆக்கட்டும் என்று சித்தராமயா கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தினத்தந்தி

இதற்கு பதில் அளித்து நளின்குமார் கட்டீல் எம்.பி. கூறியதாவது:-

அம்பேத்கருக்கு அவமானம் செய்தது காங்கிரஸ் கட்சி தான். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஏன் தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்கவில்லை. பரமேஸ்வர், மல்லிகார்ஜூனகார்கே, துருவநாராயண் ஆகியோரில் ஒருவரை முதல்-மந்திரி ஆக்கியிருக்கலாம். ஆனால் அதனை சித்தராமையா விரும்பவில்லை. தலித்கள் பற்றி பேச சித்தராமையாவுக்கு எந்த தகுதியும் கிடையாது.

பா.ஜனதா கட்சி அனைத்து சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. முஸ்லிமாக இருந்த அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவி வழங்கியது. தற்போது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் ஒரு தலித். மத்திய மத்திரியாக நியமிக்கப்பட்ட நாராயணசாமியும் தலித் தான். நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை