தேசிய செய்திகள்

இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு தலை வணங்க வேண்டும்: பிரதமர் மோடி டுவிட்

இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு தலை வணங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று 143-வது பிறந்த தினம் ஆகும். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் டெல்லியில் அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு தலை வணங்க வேண்டும். இந்தியாவின் ஒருங்கிணைத்ததோடு, நாட்டுக்காக ஓய்வின்றி உழைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்