தேசிய செய்திகள்

கறுப்பு பூஞ்சை தொற்று பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும் - எய்ம்ஸ் இயக்குனர்

கறுப்பு பூஞ்சை தொற்று பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடில்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் நோய் தாக்கி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சார்ஸ் வைரஸ் பரவியபோதும் ஒரளவிற்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. கொரோனாவுடன் உடன் கட்டுப்பாடற்ற நீரிழிவு கறுப்பு பூஞ்சையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

கறுப்பு பூஞ்சை பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. இரத்ததில் சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த வேண்டும். ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும். மேலும் ஸ்டீராய்டுகளை எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு