தேசிய செய்திகள்

‘‘பத்மாவத் படத்தை ராஜஸ்தானில் வெளியிட மாட்டோம்’’ முதல்–மந்திரி வசுந்தரா ராஜே அறிவிப்பு

பிரச்சினைக்குரிய பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் பத்மாவத் என்ற பெயரில் சில மாற்றங்களுடன் 26–ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது.

தினத்தந்தி

மும்பை,

கர்னி சேனா அமைப்பு பத்மாவத் படத்தை திரையிட விடமாட்டோம் என்று மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளது. ராஷ்ட்ரிய கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேன் சிங் நிருபர்களிடம் கூறும்போது பத்மாவத் படம் வெளியாகும் தியேட்டர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம் என்று எச்சரித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, பத்மாவத் படம் ராஜஸ்தானில் வெளியாகாது என்று அந்த மாநிலத்தின் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, பத்மாவத் பட பிரச்சினையை மக்களின் உணர்வுபூர்வ விஷயமாக அரசு பார்க்கிறது. எனவே ராஜஸ்தானில் படம் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் குலாம் சந்த் கடாரியாவிடம் கூறியிருக்கிறேன். ராணி பத்மினியின் தியாகம் என்பது மாநிலத்தின் மிகப்பெரிய கவுரவம். எங்கள் வரலாற்றில் பத்மினி வாழ்க்கையை முக்கியமான அத்தியாயமாக பார்க்கிறோம் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை