தேசிய செய்திகள்

இரும்புத்தாது கடத்தலை தடுக்க கோரி பொதுநல மனு: சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை

இரும்புத்தாது கடத்தலை தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இரும்புத்தாது கடத்தலை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக வக்கீல் எம்.எல்.ஷர்மா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, நாள்தோறும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இரும்புத்தாது கடத்தல் நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இரும்புத்தாது கடத்தலை தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை