தேசிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தின் டி.ஜி.பி. மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்க மாநில டி.ஜி.பி. வீரேந்திராவை அந்த மாநிலத்தின் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அந்த மாநிலத்தின் தேர்தல் ஆணையம் திவீரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநில டி.ஜி.பி. வீரேந்திராவை அந்த மாநிலத்தின் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. அவருக்கு பதில் மேற்கு வங்கத்தின் புதிய டி.ஜி.பி.யாக நீரஜ்நயன் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தற்போது டி.ஜி.பி. வீரேந்திரா, மேற்கு வங்க மாநிலத்தின் மின்சார பகிர்மான வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வீரேந்திரா, ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு