தேசிய செய்திகள்

இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்குவங்காள அரசு தடை...!

இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3-ம் தேதி முதல் மேற்குவங்காள அரசு தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மேற்குவங்காள அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அங்கிருந்து விமானம் மூலம் கொல்கத்தா விமான நிலையம் வரும் பயணிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இது மேற்குவங்காளத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவ வழிவகுக்கும்.

ஆகையால், ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மேற்குவங்காள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்