தேசிய செய்திகள்

2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் எவ்வளவு...?

2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் வெளியிடப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய வங்கிகள் தங்களுடைய லாப-நஷ்ட கணக்குகளை நேற்று வெளியிட்டன. அதன்படி இந்த நிதியாண்டின் (2025-26) 2-ம் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர லாபம் ரூ.13 ஆயிரத்து 357 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் பதிவானதைவிட 3.2 சதவீதம் அதிகம்.

எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர லாபம் ரூ.19 ஆயிரத்து 610 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளிலேயே அதிக லாபம் சம்பாதித்த வங்கியாக உள்ள இது கடந்த காலத்தில் பதிவானதை காட்டிலும் 10 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெடரல் வங்கியின் வருமான கணக்கு ரூ.955 கோடி அளவில் லாபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டை காட்டிலும் 9.6 சதவீதம் அதிகமாகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து