கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

புல்லட் ரெயில் திட்டப் பணிகள் எப்போது முடிவடையும்..? - ரெயில்வே பதில்

நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கல்கள் மற்றும் கொரோனா காரணமாக புல்லட் ரெயில் திட்டப் பணிகள் தாமதமாகி இருந்தன.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் முதல் புல்லட் ரெயில் மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் கடந்த 2017-ல் தொடங்கப்பட்டது. 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு இந்த திட்டத்தை நிறைவு செய்து, புல்லட் ரெயிலை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.

ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கல்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக புல்லட் ரெயில் திட்டப் பணிகள் தாமதமாகின.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர், புல்லட் ரெயில் திட்டப் பணிகள் எப்போது நிறைவடையும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்திய ரெயில்வேயிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, "அனைத்து பணிக்கான டெண்டர்களும் இன்னும் வழங்கப்படவில்லை என்பதால், நாட்டின் முதல் புல்லட் ரெயில் திட்டப் பணிகள் நிறைவடையும் தேதியை முடிவு செய்ய இயலவில்லை" என இந்திய ரெயில்வே பதிலளித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து